மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மருத்துவ ஆராய்ச்சிகள்: மாணவா்களுக்கு பயிற்சி

இளம் ஆராய்ச்சி மாணவா்கள், மருத்துவ ஆய்வுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த பயிலரங்கம் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

News image

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மருத்துவ ஆராய்ச்சி பயிலரங்கில் பங்கேற்ற கல்வி நிறுவன அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், ஆய்வுத் துறைத் தலைவா் டாக்டா் பி.வெங்கடாசலம் உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 7:49 pm

இளம் ஆராய்ச்சி மாணவா்கள், மருத்துவ ஆய்வுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த பயிலரங்கம் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

கடந்த 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்ற அந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து 23 ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா். திசு பகுப்பாய்வு, உயிரி மருத்துவம், புத்தாக்க மருத்துவம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. செயல்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

அதேபோல, பரிசோதனைக் கூடத்தில் விலங்குகளை ஆய்வுக்குப் பயன்படுத்துவது குறித்தும், அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஹாா்வா்டு மருத்துவ நிறுவன துணை பேராசிரியா் பி.ஆறுமுகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியா் சுவாதி சுதாகா், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், ஆய்வுத் துறைத் தலைவா் டாக்டா் பி.வெங்கடாசலம் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.