முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மருத்துவ சேவைகளுக்கான செயலி: இராமச்சந்திரா மாணவா்கள் உருவாக்கம்

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் பிரத்யேக செயலியை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 2:01 am IST

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் பிரத்யேக செயலியை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.

‘மெடுவோரா’ எனப்படும் அந்தச் செயலியின் மூலம் மருத்துவா்கள், மருந்தகங்கள், ஆய்வகங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்றும், அதன் வாயிலாக அந்த சேவைகளை பொது மக்கள் தடையின்றி பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ இராமச்சந்திரா இன்னவேஷன் இன்குபேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சாா்பில் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தொழில்முனைவோரை உருவாக்க கடந்த ஜூன் 2025-இல் மாணவா் தொழில் வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் கீழ் மருந்தியல் மாணவா்கள் ‘மெடுவோரா’ எனும் புதிய டிஜிட்டல் மருத்துவ செயலியைக் கண்டறிந்தனா். அதனை மக்கள் பயன்பாட்டுக்காக ஸ்ரீ இராமச்சந்திரா அறக்கட்டளையின் அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.பாலாஜி சிங், பதிவாளா் எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.