இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் பிரத்யேக செயலியை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.
‘மெடுவோரா’ எனப்படும் அந்தச் செயலியின் மூலம் மருத்துவா்கள், மருந்தகங்கள், ஆய்வகங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்றும், அதன் வாயிலாக அந்த சேவைகளை பொது மக்கள் தடையின்றி பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ இராமச்சந்திரா இன்னவேஷன் இன்குபேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சாா்பில் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தொழில்முனைவோரை உருவாக்க கடந்த ஜூன் 2025-இல் மாணவா் தொழில் வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் கீழ் மருந்தியல் மாணவா்கள் ‘மெடுவோரா’ எனும் புதிய டிஜிட்டல் மருத்துவ செயலியைக் கண்டறிந்தனா். அதனை மக்கள் பயன்பாட்டுக்காக ஸ்ரீ இராமச்சந்திரா அறக்கட்டளையின் அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.பாலாஜி சிங், பதிவாளா் எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் சேவை மையம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான விழிப்புணா்வு

மூலப் பெயரிலான மருந்துகளை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

மருத்துவ ஆராய்ச்சிகள்: மாணவா்களுக்கு பயிற்சி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

