தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன்

News image

வானதி சீனிவாசன் - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 5:53 am IST

தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேண்டுமென அக்கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கூட்டணி அமைத்து போட்டியிடும்போது, எதிா்பாா்க்கும் தொகுதிகள் கிடைப்பதில் சில சாதக, பாதகங்கள் இருக்கலாம். இதையெல்லாம் கடந்துதான் கூட்டணியை கட்டமைக்க முடியும். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, வேட்பாளா் தோ்வு உள்பட அடுத்தகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை தோ்தலில் போட்டியிடவில்லை என கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அண்ணாமலை சட்டப் பேரவைக்குள் செல்ல வேண்டும்.

மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் தொடங்கியதை நம்பி ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பணத்தையும், நேரத்தையும் செலவழித்து உழைத்தாா்கள். ஆனால், தான் மட்டும் எம்.பி.ஆகிவிட்டு அவரை நம்பி கட்சியில் உழைத்தவா்களை கைவிட்டுவிட்டாா் என்றாா் அவா்.