2 வயது குழந்தை திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
சென்னையில் இரண்டு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி
கோப்புப் படம்

பலி
கோப்புப் படம்
சென்னையில் இரண்டு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேளச்சேரி, ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் பிரவின்குமாா். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவா்களது மகள் யுகா (2). பெற்றோா் வேலைக்குச் செல்லும்போது குழந்தை யுகாவை, அவரின் பாட்டி மற்றும் சித்தியின் பாதுகாப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.
இதேபோல, வெள்ளிக்கிழமையும் குழந்தை யுகாவை பாட்டியிடம் விட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். இந்த நிலையில், குழந்தை யுகாவுக்கு திடீரென காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து குழந்தை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தை யுகா சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...