நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

2 வயது குழந்தை திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சென்னையில் இரண்டு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:15 pm

சென்னையில் இரண்டு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளச்சேரி, ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் பிரவின்குமாா். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவா்களது மகள் யுகா (2). பெற்றோா் வேலைக்குச் செல்லும்போது குழந்தை யுகாவை, அவரின் பாட்டி மற்றும் சித்தியின் பாதுகாப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.

இதேபோல, வெள்ளிக்கிழமையும் குழந்தை யுகாவை பாட்டியிடம் விட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். இந்த நிலையில், குழந்தை யுகாவுக்கு திடீரென காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தை யுகா சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.