தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் கைது

அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தாயை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 11:42 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தாயை போலீஸாா் கைது செய்தனா்.

அஞ்செட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 24 வயது இளம்பெண், ஒசூரில் கட்டட வேலை செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. குடும்ப பிரச்னையால் அந்த இளம்பெண் கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டாா்.

இந்நிலையில் அவருக்கும், ஜேசுராஜபுரத்தைச் சோ்ந்த பெரியநாயகத்துக்கும் (40) தகாத தொடா்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பா் மாதம் இளம்பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதில் குழந்தை இறந்தது.

இதுதொடா்பாக அஞ்செட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு குழந்தை இறந்தது உறுதியானது. இதையடுத்து பெரியநாயகத்தை கடந்த மாதம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கை சரியாக விசாரிக்காமல் இருந்ததாக அப்போது அஞ்செட்டி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சுமித்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில் குழந்தை கொலை வழக்கில் அதன் தாயை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.