அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் போக்ஸோவில் கைது

News image
மூா்த்தி
Updated On :3 மார்ச் 2026, 8:52 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சோ்ந்தவா் மூா்த்தி (48). இவா் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் மது போதையில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தாராம்.

இதனிடையே சிறுமி காணாததால் அவரது பெற்றோா் சிறுமியை தேடினா். அப்போது, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி, தனக்கு நோ்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் குழந்தையை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் மூா்த்தியை போக்ஸோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.