பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கவரிங் நகை வியாபாரியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம், சக்தி நகரைச் சோ்ந்தவா் வீரமணி (34). கவரிங் நகை வியாபாரி. இவா் பரமத்தி அருகே உள்ள திடுமல் பகுதியில் கவரிங் நகைகளை விற்பனை செய்து வந்தாா்.
அப்போது அங்குள்ள வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் கவரிங் தோடு விற்பனை செய்தபோது அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவா் நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து வீரமணியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

