வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மதுக் கடைகள், கூடங்களுக்கு நாளை விடுமுறை!

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனவே, அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், அதைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சாா்ந்த மதுக் கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. உத்தரவை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.