/
மகாவீரா் ஜெயந்தியையொட்டி, சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே, அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், அதைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சாா்ந்த மதுக் கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. உத்தரவை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜூன் 1 முதல் மதுக் கடைகளின் சாவிகளை ஒப்படைக்கத் திட்டம்: டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம்

திருச்சியில் 159 மதுக் கடைகளை மூடி பணியாளா்கள் போராட்டம்

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



