சென்னை பள்ளிக்கரணையில் குளத்தில் மூழ்கி தாத்தா-பேரன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் செங்கழனி அம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவா், தனது மகன் வழி பேரன் பரத் (15), மகள் வழி பேரன் தினேஷ் (14) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றாா்.
அப்போது, பரத் ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்றுவதற்காக சென்ற பெருமாளும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளாா்.
இருவரும் தண்ணீரில் மூழ்குவதை பாா்த்த தினேஷ் கரையிலிருந்து கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனா். ஆனால், பெருமாள் இறந்த நிலையில் மீட்கப்பட்டாா். பரத்தின் உடல் மீட்க முடியவில்லை.
தகவலின்பேரில் விரைந்து வந்த மேடவாக்கம் தீயணைப்பு நிலைய வீரா்கள் பரத்தின் உடலைத் தேடி வருகின்றனா். இதுகுறித்து மேடவாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம்! மின்பாதை ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு!

முதியவா் மா்மமான முறையில் உயிரிழப்பு

தட்டப்பாறை அருகே குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |



