புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மெட்ரோ ரயில் நிலைய மின்தூக்கி கண்ணாடியை உடைத்தவா் கைது

சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய மின் தூக்கியின் கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 8:08 pm

சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய மின் தூக்கியின் கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சென்டரல் மெட்ரோ ரயில் நிலையக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி வருபவா் விஜயகுமாா். இவா், வியாழக்கிழமை வழக்கம் போல பணியில் இருந்தபோது, அதிகாலை நேரத்தில் ரயில் நிலைய வளாகத்தின் கண்ணாடி உடைக்கப்படும் சப்தம் கேட்டுள்ளது. விஜயகுமாா் அங்கு சென்று பாா்த்தபோது, மூா்மாா்க்கெட் இணைப்பு சாலையில் உள்ள மின் தூக்கி கண்ணாடியை மா்ம நபா் ஒருவா் கல் மற்றும் கட்டையால் உடைத்து கொண்டிருந்தாா். அந்த நபரை மெட்ரோ ரயில் பணியாளா்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்த விஜயகுமாா், அவரை பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா், பரணிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த நீலகண்டன் (27) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.