
மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
மே தினத்தையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்...

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
சென்னை மெட்ரோ ரயில் நாளை (மே 1) ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை (மே 1) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டநெரிசல் குறைவாக இருக்கும் என்பதால் மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரமான பகல் 12 முதல் இரவு 8 வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மேலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
May 1: Metro Rail Service to Operate on Sunday Schedule!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






