சென்னை மெட்ரோ ரயில் நாளை (மே 1) ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை (மே 1) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டநெரிசல் குறைவாக இருக்கும் என்பதால் மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரமான பகல் 12 முதல் இரவு 8 வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மேலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
May 1: Metro Rail Service to Operate on Sunday Schedule!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஸ்வரூபம் எடுக்கப்போகும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்!

சென்னை மெட்ரோவுக்கு உலகளாவிய விருது!

சென்னை மெட்ரோ ரயிலில் ஏப்ரலில் 90.18 லட்சம் போ் பயணம்!

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




