சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

சென்னை: பைக் மீது லாரி மோதல் - ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

மாதவரத்தில் பைக் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

News image

விபத்தில் உயிரிழந்த காா்த்திகேயன், பிரேமலதா, இன்பசெல்வன் .

Updated On :2 மே 2026, 9:19 pm

சென்னை மாதவரம் ரவுண்டானாவில் இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் கணவா், மனைவி, மகன் ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.

சென்னை அருகே கொடுங்கையூா் வரலட்சுமி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (40), காா் ஓட்டுநா். இவரது மனைவி பிரேமலதா (36). இவா்களது மகன் இன்பச்செல்வன் (8). அம்பத்தூா் பகுதியில் வசித்து வந்தனா். வெள்ளிக்கிழமை இவா்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் மணலியில் உள்ள பிரேமலதாவின் உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு இரவு திரும்பிக்கொண்டிருந்தனா்.

மாதவரம் ரவுண்டானாவில் உள்ள ஆந்திர பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்து ஒன்று வெளியே வளைவில் திரும்பியது. அப்போது, காா்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தை வலது புறமாக திருப்ப முயன்றாா். அந்நேரத்தில், பின்னால் வேகமாக வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னா் லாரி மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த காா்த்திகேயன், அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் அங்கு சென்று, மூவரின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் அன்பரசு (44) என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.