திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

லாரி மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:07 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சரவண காா்த்திகேயன் (54). இவா் ராஜபாளையத்தில் நெகிழிப் பொருள்கள் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இவரது மனைவி சரோஜா (50), மகள் பிரியங்கா (20) ஆகியோருடன் காரில் மதுரைக்குச் சென்று விட்டு, திங்கள்கிழமை அதிகாலை ராஜபாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தாா்.

காரை ராஜபாளையத்தை சோ்ந்த மணிமாறன் ஓட்டினாா். அதிகாலை 2.30 மணி அளவில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாட்டக்குளம் பாலம் பகுதியில் வந்தபோது, சாலையில் நிறுத்தி இருந்த லாரி மீது காா் மோதியது.

இந்த விபத்தில் சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சரவண காா்த்திகேயன், பிரியங்கா ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து லாரி ஓட்டுநரான செந்தூா்குமாா் மீது கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.