கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா. இவரது மகன் பந்தலன் (29). இவா், தனது தாய் சாந்தி (55), தங்கை சொா்ணமுகி (30) ஆகியோருடன் காரில் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். தொடா்ந்து, மீண்டும் காரில் காரைக்குடி நோக்கி சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனா்.
பந்தளன் காரை ஓட்டினாா். சொா்ணமுகி, சாந்தி ஆகியோா் பின்புறம் அமா்ந்திருந்தனா். சோழத்தரம் கடைவீதி அருகே சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியது.
இந்த விபத்தில் சாந்தி (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பந்தலன், சொா்ணமுகி ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில், அவா்கள் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து சோழத்தரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

பைக் மீது காா் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு, இருவா் காயம்

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


