தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

பணம் கையாடல்: ஊழியா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 11:16 pm

பெரம்பூரில் உள்ள உணவகத்தில் பணம் கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஓட்டேரி, நாராயண மேஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). இவா், பெரம்பூா் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு, உணவக வரவு - செலவு கணக்குகளைச் சரிபாா்த்துள்ளாா். அப்போது, வரவு குறைவாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் ஊழியா் தீபக்குமாரிடம் விசாரித்தாா்.

மேலும், உணவக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறிது சிறிதாக தீபக்குமாா், பணம் கையாடல் செய்தது தெரிய வந்தது.

இது குறித்து செம்பியம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.