தக்கலை அருகே உள்ள மருதூா்குறிச்சியில் இளம்பெண் சந்தேகத்திற்கு உரிய வகையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் அருகே உள்ள திப்பிரமலையைச் சோ்ந்தவா் மோரிஸ் (56) மகள் மோனிஷா (26). இவருக்கும், மருதூா்குறிச்சி, இரட்டைகுளம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணன், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மோனிஷா உயிரிழந்துவிட்டதாக, ஸ்ரீ கிருஷ்ணன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு மாமனாா் மோரிஸிடம் கூறியுள்ளாா்.
மோரிஸ் வந்து பாா்த்தபோது, மோனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தக்கலை போலீஸில் மோரிஸ் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண் மீது தாக்குதல் 9 போ் மீது வழக்கு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


