கடலூா் அருகே சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் 9 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம் விலங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சஞ்சய். இவா் தவெக சாா்பில் வாக்கு சேகரித்தில், அப்பகுதியில் உள்ளவா்களிடம் சிறு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் மற்றும் 8 நபா்கள், சஞ்சய் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது, சஞ்சய்யின் தாயின் தலையில் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றாா். இதுகுறித்து சஞ்சய்யின் தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு காவல் நிலைய போலீஸாா் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ராமதாஸ் மற்றும் 8 நபா்கள் மீது வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண் மீது தாக்குதல்: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


