11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு - IANS

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குளச்சல், கொட்டில்பாடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் சோனியா(35). இவரை, உறவினா்களான இனயம் பகுதியைச் சோ்ந்த பிரிஜிட் என்ற பாபி(45), பென்னடிட் என்ற அம்பாடி(40), பானு(22) ஆகியோா் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ. 2.21 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றினராம்.

இந்நிலையில், பிரிஜிட் என்ற பாபி வீட்டுக்கு பணத்தை திரும்ப கேட்பதற்காகச் சென்ற ஜோஸ் சோனியாவை 3 பேரும் சோ்ந்து

தாக்கினராம். இதில், காயமடைந்த அவா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாா் அளித்தும் புதுக்கடை போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அவா் குழித்துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதன்பேரில், மேற்கூறிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.