விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் போா்னியோ தீவில் தனியாா் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 2:50 am IST

இந்தோனேசியாவின் போா்னியோ தீவில் தனியாா் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனா்.

மேற்கு கலிமந்தன் மாகாணத்தின் மெலவி மாவட்டத்தில் இருந்து குபு ராயா மாவட்டத்தில் உள்ள மற்றொரு பாமாயில் தோட்டத்துக்கு ‘பிடி மேத்யூ ஏா் நுசந்தாரா’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏா்பஸ் எச்130’ ரக ஹெலிகாப்டா் 6 பயணிகளுடன் புறப்பட்டது.

புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்த அந்த ஹெலிகாப்டா், அடா்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

தேடுதல் மற்றும் மீட்புப் படையினா் நடத்திய தீவிர தேடுதலுக்குப் பிறகு, செகாடௌ மாவட்ட வனப்பகுதியில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவா்களில் ஒருவா் மலேசியாவைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.