அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்த பின்னா்தான் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்கள் எண்ணிக்கைக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தமிழக பேரவைத் தோ்தல் முடிவுகள் தொடா்பாக கிரீஷ் சோடங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக இளைஞா்கள், பெண்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனா். எனவே, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
ஏற்கெனவே, தமிழக தோ்தல் முடிவுகள் தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன். தோ்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவெக நிறைவேற்ற வேண்டும். விஜய்யிக்கு வாழ்த்துகள் என்றாா் அவா்.
தொடர்புடையது

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி

தவெகவுக்காக காங்கிரஸ் தொடா்ந்து போராடும்: கிரீஷ் சோடங்கா்

தவெகவுக்கு ஆதரவு இல்லை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திடீர் அறிவிப்பு!!
தவெகவுக்கு ஆதரவு! காங்கிரஸ் விதித்த ஒரே நிபந்தனை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

