தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

அதிமுக புதிய எம்எல்ஏக்கள் புதுவையில் முகாம்?

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலா் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :7 மே 2026, 1:38 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலா் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அக்கட்சிக்கு 118 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

இதனிடையே அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில்லை என அதிமுக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலா் புதுச்சேரி அருகே பூரணங்குப்பம், புதுக்குப்பத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை தகவல் வெளியானது.