சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலா் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அக்கட்சிக்கு 118 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
இதனிடையே அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில்லை என அதிமுக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலா் புதுச்சேரி அருகே பூரணங்குப்பம், புதுக்குப்பத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை தகவல் வெளியானது.
தொடர்புடையது
சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

ஆற்காடு: அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

துறைமுகம்... ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுக!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


