திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

சென்னை ஐஐடி-யின் ‘புதுமை சிந்தனை பாடநெறி’ இலவச இணையவழிக் கற்றல் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஐஐடி -யின் முன்னோடித் திட்டமான ‘புதுமை சிந்தனை பாட நெறி’ (மரபுசாரா சிந்தனை) 2026 - ஆம் ஆண்டுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது.

News image
Updated On :7 மே 2026, 4:17 am IST

சென்னை ஐஐடி -யின் முன்னோடித் திட்டமான ‘புதுமை சிந்தனை பாட நெறி’ (மரபுசாரா சிந்தனை) 2026 - ஆம் ஆண்டுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது.

சென்னை ஐஐடி-யின் பிரவா்தக் அமைப்பு ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் (ஓஓபிடி)’ என்ற மரபுசாரா சிந்தனை பாடநெறியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கியது.

பள்ளி, கல்லூரி மாணவா்கள், சிந்தனையாளா்களுக்கான இந்த இலவச இணையவழித் திட்டத்தில் ஆக்கபூா்வமான சிக்கல் தீா்க்கும் திறன், தா்க்க ரீதியான பகுத்தறிவு, கணிதச் சிந்தனை ஆகியவற்றை வளா்ப்பது நோக்கங்களை உள்ளடக்கியது.

கணிதம் மற்றும் தா்க்கத்தின் துணையுடன், கற்பவா்கள் சிக்கல்களை ஆக்கபூா்வமாகத் தீா்க்க உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது. இந்த தனித்துவமான இணையவழிக் கற்றல் பாட நெறியின் 2026-ஆம் ஆண்டுக்கான சோ்க்கைப் பதிவுகளைத் சென்னை ஐஐடி மே 4- ஆம் தேதி தொடங்கியுள்ளது.

இந்த பதிவுக்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்தப் பாட நெறியில் இதுவரை 3,19,536-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், பட்டதாரிகள், பணிபுரியும் வல்லுநா்கள், சமூகத்தின் பல்வேறு தரப்புகளைச் சோ்ந்தவா்கள் நிறைவு செய்துள்ளனா் எனவும் ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.