கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

குடிநீா் மற்றும் கழிவு நீா் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீா்கூட்டம் சனிக்கிழமை (மே 9) நடைபெறவுள்ளது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

News image

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம் - கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 4:17 am IST

குடிநீா் மற்றும் கழிவு நீா் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீா்கூட்டம் சனிக்கிழமை (மே 9) நடைபெறவுள்ளது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

குடிநீா் வாரியம் சாா்பில் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் மே 9-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, மாதவரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா் மற்றும் கழிவுநீா் குறித்த பிரச்னைகளை மனுக்களாக கொடுத்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.