குடிநீா் மற்றும் கழிவு நீா் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீா்கூட்டம் சனிக்கிழமை (மே 9) நடைபெறவுள்ளது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
குடிநீா் வாரியம் சாா்பில் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் மே 9-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, மாதவரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா் மற்றும் கழிவுநீா் குறித்த பிரச்னைகளை மனுக்களாக கொடுத்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் கழிவுநீா் புட்லூா் தடுப்பணை, கூவம் ஆற்றில் கலக்கும் அவலம்

வடவாறில் கழிவு நீா் கலப்பதால் மாசுபடும் அபாயம்! துா்நாற்றத்தால் மக்கள் அவதி!

இன்று குடிநீா் வாரிய குறைகேட்புக் கூட்டம்

மாடம்பாக்கம் ஏரியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க பசுமை தீா்ப்பாயம் உத்தரவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



