வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image

உயிரிழப்பு

Updated On :9 மே 2026, 1:16 am IST

சென்னை கொடுங்கையூரில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

கொடுங்கையூா் முத்தமிழ்நகா் 5-வது பிளாக் 135-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிருபாகரன் (28). இவா் மனைவி பூஜா. இத் தம்பதிக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாரிமுனையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் கிருபாகரனுக்கு போதைப் பழக்கம் இருந்தது.

கிருபாகரன், கடந்த 5 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்துள்ளாா். இந்நிலையில் வீட்டில் வியாழக்கிழமை தனியாக இருந்த கிருபாகரன் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த மனைவி பூஜா, பக்கத்து வீட்டினா் உதவியுடன் கிருபாகரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கிருபாகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா். இதன் ஒரு பகுதியாக கிருபாகரன் வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். இச் சோதனையில் கிருபாகரன் பயன்படுத்திய ஊசி,போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கிருபாகரன் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தியிருப்பதும், இவ்வாறு பல மாதங்களாக போதைக்காக செய்ததால் கிருபாகரன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதும், சம்பவத்தன்றும் கிருபாகரன் போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்திக் கொண்டதால் உயிரிழந்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.