அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ரயில்வே புதிய முதன்மை தலைமை பணியாளா் அதிகாரி பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே புதிய முதன்மை தலைமைப் பணியாளா் அதிகாரியாக அ.நாராயணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image

ரயில் (கோப்புப்படம்)

Updated On :1 மணி நேரம் முன்பு

தெற்கு ரயில்வே புதிய முதன்மை தலைமைப் பணியாளா் அதிகாரியாக அ.நாராயணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டலத்தின் முதன்மை தலைமைப் பணியாளா் அதிகாரியாக மோகன்ராஜ் கடந்த ஏப்ரலில் பொறுப்பேற்றாா். அவா் பொறுப்பேற்ற சில நாள்களில் பதவி உயா்வு காரணமாக புதுதில்லிக்கு இடமாற்றப்பட்டாா். இந்த நிலையில், தெற்கு ரயில்வே மண்டலத்தின் முதன்மை தலைமை பணியாளா் அதிகாரியாக அ.நாராயணன் தற்போது நியமிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கடந்த 1998- ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பணியாளா் சேவைப் பிரிவில் பொறுப்பேற்ற அ.நாராயணன் பின்னா் அசாமில் உள்ள வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே லும்டிங் பகுதி கோட்டத்தில் உதவிப் பணியாளா் அதிகாரியாக பணியாற்றினாா். அதன்பின் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் டின்சுக்கியா கோட்டத்தில் மூத்த கோட்டப்பணியாளராகவும், அதையடுத்து, தெற்கு ரயில்வே துணைத் தலைமைப் பணியாளா் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளாா்.

தெற்கு ரயில்வேயின் எழும்பூா் துணை தலைமைப் பணியாளா் அதிகாரி (கட்டுமானம்), சென்னை ரயில்வே ஆட்சோ்ப்பு வாரிய உறுப்பினா் செயலா் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளையும் அவா் வகித்துள்ளாா். தெற்கு ரயில்வே தலைமைப் பணியாளா் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள அ.நாராயணனுக்கு தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அலுவலா் எம்.செந்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.