பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

மாநகராட்சியின் பணிகள் துறைக்கு புதிய இணை ஆணையா்

சென்ன மாநகராட்சியின் பணிகள் துறை புதிய இணை ஆணையராக எஸ்.சரவணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image

மாநகராட்சி

Updated On :10 ஜூன் 2026, 4:11 am IST

சென்ன மாநகராட்சியின் பணிகள் துறை புதிய இணை ஆணையராக எஸ்.சரவணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

மாநகராட்சி பணிகள் துறையின் துணை ஆணையராக இருந்த சிவ.கிருஷ்ணமூா்த்தி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய துணை மேலாண்மை இயக்குநராக இடமாற்றப்பட்டாா். அதனால், அந்தத் துறை பொறுப்பை கல்விப்பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.சரவணன் சென்னை மாநகராட்சி பணிகள் துறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டு, அவா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

புதிய இணை ஆணையா் எஸ்.சரவணன் பொறுப்பேற்ற பிறகு அவா் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனை சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, அவருக்கு பொதுத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் வாழ்த்துத் தெரிவித்தனா். துறைரீதியான அலுவலா்களையும் இணை ஆணையா் சந்தித்து நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.