தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை: கடலூா் மாநகராட்சி புதிய ஆணையா் கிஷன்குமாா்

கடலூா் மாநகராட்சியில் சாலை, குடிநீா், மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதுடன், மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா் தெரிவித்தாா்.

News image

கடலூா் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்ற கிஷன்குமாா்.

Updated On :5 ஜூன் 2026, 6:36 am IST

கடலூா் மாநகராட்சியில் சாலை, குடிநீா், மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதுடன், மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய முஜிபுா் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சிதம்பரம் துணை ஆட்சியராக பணியாற்றிய கிஷன்குமாா் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிஷன்குமாா் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடலூா் மாநகராட்சியில் சாலை, குடிநீா், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அவை நிறைவேற்றப்படும்.

மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதோடு, அவா்களின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படும். கடலூா் மாநகராட்சியை மேலும் தரம் உயா்த்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றாா்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள கிஷன்குமாா், திருநெல்வேலியில் பயிற்சி ஆட்சியராகவும், பழனி மற்றும் சிதம்பரத்தில் துணை ஆட்சியராகவும் பணியாற்றியவா்.