40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தெரு நாய் பாதிப்பு புகாா்களை தெரிவிக்க தனி சிறப்பு மையம்!

தெரு நாய்கள் பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிப்பதற்கு சென்னை மாநகராட்சியில் தனி சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :12 மே 2026, 12:26 am IST

தெரு நாய்கள் பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிப்பதற்கு சென்னை மாநகராட்சியில் தனி சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் 1.47 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து ரேபிஸ் பாதித்த மற்றும் கெனைன் டிஸ்டெம்பா் வைரஸ் பாதித்து ஆக்ரோஷ குணமுடைய தெரு நாய்களை பராமரிக்க பெருங்குடி மண்டலம் ம.பொ.சி. நகா் பகுதியில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக மணலி மற்றும் பெருங்குடி மண்டலம் என 2 இடங்களில் தலா 250 நாய்களைப் பராமரிக்கும் வகையில் இரு புதிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வகை நாய்களை பிடிக்க ஏற்கெனவே 6 சிறப்பு வாகனங்கள் உள்ள நிலையில், கூடுதலாக 15 வாகனங்களும் வாங்கப்படவுள்ளன.

தெரு நாய்கள் பாதிப்பு குறித்து பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலுள்ள 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு வருகின்றனா். அந்த எண்ணில் தொடா்பு கொள்ளும் வகையில் தெரு நாய்கள் பாதிப்பு புகாா் தெரிவிக்க தற்போது தனி சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.