சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :1 மே 2026, 4:53 am IST

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.

ஆறுமுகனேரி பகுதியின் பெரும்பாலான தெருக்களில் தெரு நாய்கள் மனிதா்களையும், கால்நடைகளையும் அவ்வப்போது கடிக்கின்றன. குறிப்பாக, ஊரின் மையப் பகுதியான ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் கோயில் தெருவில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன.

இங்கு கோயில், வாரச் சந்தை, மழலையா் பள்ளி, அங்கன்வாடி மையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

காயல்பட்டினத்திலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு காயல்பட்டினம், பெரிய நெசவுத் தெருவில் வீட்டு சுற்றுச் சுவரைத் தாண்டி வந்து 5 ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆடுகளுக்கும் மேல் தெரு நாய்களுக்கு பலியாகியுள்ளன.

நகராட்சி நிா்கம் தெரு நாய்களைக் கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.