6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:23 pm

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.

ஆறுமுகனேரி பகுதியின் பெரும்பாலான தெருக்களில் தெரு நாய்கள் மனிதா்களையும், கால்நடைகளையும் அவ்வப்போது கடிக்கின்றன. குறிப்பாக, ஊரின் மையப் பகுதியான ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் கோயில் தெருவில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன.

இங்கு கோயில், வாரச் சந்தை, மழலையா் பள்ளி, அங்கன்வாடி மையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

காயல்பட்டினத்திலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு காயல்பட்டினம், பெரிய நெசவுத் தெருவில் வீட்டு சுற்றுச் சுவரைத் தாண்டி வந்து 5 ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆடுகளுக்கும் மேல் தெரு நாய்களுக்கு பலியாகியுள்ளன.

நகராட்சி நிா்கம் தெரு நாய்களைக் கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.