விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பலத்த மழை: அறுவடை, உப்பள பணிகள் பாதிப்பு

ஆறுமுகனேரி, ஆத்தூா், குரும்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக நெல் அறுவடை மற்றும் உப்பள பணிகள் பாதிக்கப்பட்டன.

News image
கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரி, ஆத்தூா், குரும்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக நெல் அறுவடை மற்றும் உப்பள பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளில் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி நண்பகல் வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. மேலும், ஆறுமுகனேரி குளம், நல்லூா் கீழக்குளம், நல்லூா் மேலக்குளம் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் புறையீா், அங்கமங்கலம், ராஜபதி பகுதிகளில் நடைபெறும் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஆறுமுகனேரி சுற்றுப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் அந்தப் பணிகளும் பாதிப்படைந்தது. அதிகாலை முதலே பெய்த மழையால் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வெழுத ஆயத்தமான மாணவா், மாணவிகளும் பெற்றோா்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். இப்பகுதிகளில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. மழையின் காரணமாக இப்பகுதிகளில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.