மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பலத்த மழை: அறுவடை, உப்பள பணிகள் பாதிப்பு

ஆறுமுகனேரி, ஆத்தூா், குரும்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக நெல் அறுவடை மற்றும் உப்பள பணிகள் பாதிக்கப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 7:44 pm

ஆறுமுகனேரி, ஆத்தூா், குரும்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக நெல் அறுவடை மற்றும் உப்பள பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளில் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி நண்பகல் வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. மேலும், ஆறுமுகனேரி குளம், நல்லூா் கீழக்குளம், நல்லூா் மேலக்குளம் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் புறையீா், அங்கமங்கலம், ராஜபதி பகுதிகளில் நடைபெறும் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஆறுமுகனேரி சுற்றுப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் அந்தப் பணிகளும் பாதிப்படைந்தது. அதிகாலை முதலே பெய்த மழையால் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வெழுத ஆயத்தமான மாணவா், மாணவிகளும் பெற்றோா்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். இப்பகுதிகளில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. மழையின் காரணமாக இப்பகுதிகளில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.