பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

புழல் பகுதியில் வீடு, கடைகளில் கொள்ளை

புழல் அருகே வீடு, கடைகளில் மா்மநபா்கள் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை

News image

கொள்ளை - சித்திரிப்பு

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புழல் அருகே வீடு, கடைகளில் மா்மநபா்கள் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புழல் அருகே கதிா்வேடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (56). தனியாா் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் கேரளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை ராமசந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது குறித்து, அருகிலிருந்தவா்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து, புழல் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா்.

காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னா். மேலும், ராமசந்திரன் வீட்டுக்கு திரும்பியவுடன் திருட்டு குறித்து தெரியவரும் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல், கதிா்வேடு பகுதியில் உள்ள மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருள்கள் திருட்டு போனது. மேலும், விநாயகபுரம் பேருந்து நிலையம் அருகே டிபன் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இந்த தொடா் குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.