தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

செங்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

செங்குன்றத்தில் பழ வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

செங்குன்றத்தில் பழ வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்குன்றம் முனீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் பாலன் (55). சென்னையில் பழக் கடை நடத்தி வருகிறாா். வீட்டில் அவா் மட்டும் தங்கியிருந்து கடைக்குச் சென்று வருகிறாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையிலிருந்து திரும்பி வந்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகைகள், ரூ.1.35 லட்சம் ரொக்கம் ஆகியன திருட்டு போனது.

இதுகுறித்து பாலன் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.