வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

News image

சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 12:03 am IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே மண்டலம், சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

அதனடிப்படையில், கடந்த நிதி ஆண்டில் (2025-2026) மட்டும் 26 ரயில் நிலையங்களில் மொத்தம் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

‘ரியல் டைம் கண்காணிப்பு’ எனும் திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் எண்ணூா், அத்திப்பட்டு, புதுநகா், நத்தியம்பாக்கம், மீஞ்சூா், பொன்னேரி, கவரைப்பேட்டை, பெரம்பூா் லோகோ பணிமனை, வில்லிவாக்கம், கொரட்டூா், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனூா், ஆவடி, பட்டாபிராம், இந்துக் கல்லூரி, நெமிலிச்சேரி, திருநின்றவூா், செவ்வாய்ப்பேட்டை சாலை, புட்லூா், ஏகாட்டூா், கடம்பத்தூா், செஞ்சி பானம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், மணவூா் ஆகிய நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாகப் பொருத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.