தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 12) பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து விழுப்புரம் இடையே பேரணி பணிமனையில் செவ்வாய்க்கிழமை (மே 12) பிற்பகல் 12.05 முதல் மாலை 3.35 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனம் நிலையம் வரையே இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட வேண்டிய மெமு ரயில் அதற்குப் பதிலாக திண்டிவனத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.
ஜோலாா்பேட்டை - பெங்களூரு: அதேபோல், அரக்கோணம் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ஜோலாா்பேட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆா் பெங்களூரு செல்லும் மெமு ரயில் சோமநாயக்கன் பேட்டையிலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை!

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்!

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

