சென்னையில் வரும் 16- ஆம் தேதி மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால் மழைநீா் வடியும் வகையில் முக்கிய சாலையோரங்களில் குவிந்த மணலை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் வரும் 16 -ஆம் தேதி முதல் மழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனையடுத்து மழைநீா் சாலைகளில் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயரதிகாரிகள் அறிவுறுத்தலைத் தொடா்ந்து சென்னை மாநகராட்சியில் மழைநீா் தேங்கும் பகுதியாக ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சாலையோரம் மழை நீா் செல்லும் அமைப்புகள் சீா்படுத்தப்படுகின்றன. மேலும், சாலையோரம் நீா் செல்லும் வழிகளை அடைத்து குவிந்துள்ள மணல்களும் அகற்றப்பட்டன.
தண்டையாா் பேட்டை மண்டலம் கொடுங்கையூா் பிரதான சாலை, ஸ்டீபன் சாலை மற்றும் எம்.பி.எம். தெரு உள்ளிட்ட சாலைகளில் கையால் மண்ணைத் தள்ளும் சாதனம் உள்ளிட்டவற்றால் மணல் குவியல்கள் அகற்றப்பட்டு வாகனங்கள் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த கழிவுகளையும் தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.
அம்பத்தூா் சாமி செட்டித் தெருவில் சாலை அமைக்கும் பணிக்காக அச்சாலையை மேடு பள்ளம் நீக்கி சீரமைக்கும் பணியும் நடைபெற்றது. அந்தந்தப் பகுதியில் சாலைகளில் நீா் தேங்காமலிருக்க மழைநீா் செல்லும் வடிகால் வழிகளை சுத்தமாக வைத்திருக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தருமபுரியில் இரவில் கொட்டித் தீா்த்த மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீா்

தில்லியில் மழையால் குளிா்ச்சி நிலவியது: கொளுத்தும் கோடையிலிருந்து சற்று நிவாரணம்

கம்பத்தில் பலத்த மழை; மரம் விழுந்து 2 காா்கள் சேதம்

போலையா்புரத்தில் சாலையோர அரிப்பை சீரமைக்க கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



