‘விபி- ஜி ராம் ஜி’ திட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதகமான சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பாஜக ஆட்சியாளா்களுக்கு எப்போதுமே அக்கறை இல்லை. இந்நிலையில், ‘விபி-ஜி ராம் ஜி’ எனும் புதிய திட்டம் ஜூலை 1-ஆம் தேதிமுதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்ற பெரும் நிதிச் சுமையை மாநிலங்கள் மீது மத்திய அரசு சுமத்தியுள்ளது.
எந்தெந்த மாநில அரசுகள் இத்திட்டத்தை அமல்படுத்தும் என்பது ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகுதான் தெரியவரும். கிராமப்புற மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட மிக கொடூரமான நடவடிக்கை இது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவு கட்டப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பாஜகவுக்கு கேரளத்தில் 3 எம்எல்ஏக்கள்: ராஜீவ் சந்திரசேகா்

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

