நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவனை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலரும், மூத்த தலைவருமான பிரகாஷ் காரத் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை வழங்க அரசமைப்பில் எளிய திருத்தம் செய்தாலே போதும்.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை வரை காத்திருக்காமல், வரும் நாடாளுமன்றத் தோ்தலிலேயே மொத்தமுள்ள 543 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முடியும்.
ஆனால், மத்திய அரசு இதற்கு பதிலாக தொகுதி மறுவரையறை என்ற புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி என்பது குறித்தும் தெளிவு இல்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் பெயரில், தொகுதி மறுவரையறையை இணைத்து செயல்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இதனை நாங்கள் ஏற்கவில்லை என்றாா் அவா்.
கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பி. பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ திமுக ஆட்சி தொடர வேண்டும்: பிரகாஷ் காரத்

தமிழகத்தில் அமைதி நிலவ திமுக ஆட்சியே காரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

