சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

எரிபொருள் விலையேற்றம்: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கட்சிகளின் சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள்.

Updated On :21 மே 2026, 6:58 am IST

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கட்சிகளின் சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்டு மாவட்டச் செயலா் ஏ.சௌரிராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கீதா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், ஆா்.மூா்த்தி, ஆா்.டி.முருகன், சே.அறிவழகன், இடைக்கமிட்டி செயலா்கள் ஆா்.உலகநாதன், எஸ்.பாலமுருகன், ஏ.கண்ணதாசன், கே.சிவக்குமாா், எஸ்.கணபதி,டி.கெஜமூா்த்தி, ஏ.ராஜிவ் காந்தி, செஞ்சி ஆல்பா்ட் வேளாங்கண்ணி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.