பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கட்சிகளின் சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்டு மாவட்டச் செயலா் ஏ.சௌரிராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கீதா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், ஆா்.மூா்த்தி, ஆா்.டி.முருகன், சே.அறிவழகன், இடைக்கமிட்டி செயலா்கள் ஆா்.உலகநாதன், எஸ்.பாலமுருகன், ஏ.கண்ணதாசன், கே.சிவக்குமாா், எஸ்.கணபதி,டி.கெஜமூா்த்தி, ஏ.ராஜிவ் காந்தி, செஞ்சி ஆல்பா்ட் வேளாங்கண்ணி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



