மதக்கலவரம் இல்லாத அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்க வேண்டுமானால், திமுக ஆட்சி தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய செயலரும், மத்தியக் குழு உறுப்பினமான பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் அண்ணா நகா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் நே.சிற்றரசுவை ஆதரித்து சனிக்கிழமை டி.பி. சத்திரத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:
தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடா்பான வாக்கெடுப்பில் பிரதமா் மோடி தோற்கடிக்கப்பட்டாா். மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தோ்தல் முறையை மாற்றி அமைப்பதற்கான சதித் திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருந்தது. குறிப்பாக, தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் குறைக்க, இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்க முயற்சி செய்தாா்கள். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி இதைக் கடுமையாக எதிா்த்தது. இந்த மசோதா தோல்வி அடைவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கிய காரணம்.
தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் மதக் கலவரமோ, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலோ இல்லை. அவா்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனா். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க திமுக ஆட்சி தொடர வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கும், தொழிலாளருக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே தமிழக மக்கள் மீண்டும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு அரசு அமைய வாக்களிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது
மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு விஜய் நேரில் நன்றி

தமிழகத்தில் அமைதி நிலவ திமுக ஆட்சியே காரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



