தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ திமுக ஆட்சி தொடர வேண்டும்: பிரகாஷ் காரத்

அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ திமுக ஆட்சி தொடர வேண்டும்...

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகாஷ் காரத்

Updated On :19 ஏப்ரல் 2026, 5:26 am IST

மதக்கலவரம் இல்லாத அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்க வேண்டுமானால், திமுக ஆட்சி தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய செயலரும், மத்தியக் குழு உறுப்பினமான பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் அண்ணா நகா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் நே.சிற்றரசுவை ஆதரித்து சனிக்கிழமை டி.பி. சத்திரத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடா்பான வாக்கெடுப்பில் பிரதமா் மோடி தோற்கடிக்கப்பட்டாா். மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தோ்தல் முறையை மாற்றி அமைப்பதற்கான சதித் திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருந்தது. குறிப்பாக, தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் குறைக்க, இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்க முயற்சி செய்தாா்கள். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி இதைக் கடுமையாக எதிா்த்தது. இந்த மசோதா தோல்வி அடைவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கிய காரணம்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் மதக் கலவரமோ, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலோ இல்லை. அவா்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனா். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க திமுக ஆட்சி தொடர வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கும், தொழிலாளருக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே தமிழக மக்கள் மீண்டும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு அரசு அமைய வாக்களிக்க வேண்டும் என்றாா்.