40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கொலை வழக்கில் பிடியாணை: ஒருவா் கைது

கொலை வழக்கில் ஜாமின் பெற்று தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த நபரை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 1:13 am IST

கொலை வழக்கில் ஜாமின் பெற்று தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த நபரை கைது செய்தனா்.

சென்னை பெரியமேடு அல்லிக்குளம் பகுதியில் கடந்த 2022 டிச.3-ஆம் தேதி முனுசாமி என்பவா் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கில் டி.பி.சத்திரம் பகுதியை சோ்ந்த அப்பாஸ்(28) என்பவரை பெரியமேடு காவல்துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே ஜாமினில் வெளியே வந்த அப்பாஸ், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அப்பாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து அப்பாஸை போலீஸாா் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.