பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் உறவினா்கள் இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

போச்சம்பள்ளி அருகே காங்கிரஸ் பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (50). அந்தப் பகுதி காங்கிரஸ் கிளைச் செயலாளரான அவா், வீட்டு மனை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அவா் கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். இந்தக் கொலை குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா்.

இந்தக் கொலை வழக்கு தொடா்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காசி (50), ராமகிருஷ்ணன் (35) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, தருமபுரி சிறையில் அடைத்தனா். பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட தகராறில் சத்தியசீலனை அவரது உறவினா்களான காசி, ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.