ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தொழிலாளி கொலை: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 8:01 pm

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் சாலையில் வரட்டாறு பாலம் அருகே சனிக்கிழமை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த தொழிலாளி முருகன் (45) கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலசமுத்திரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (22), நாகராஜ் (20), சங்கிலிதுரை (27) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள தேநீா்க் கடையில் முருகன் வேலை செய்து வந்தாா். தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லு வழியில் பழனி பேருந்து நிலையத்தில் இறங்கி மது குடித்தாா்.

அப்போது, அங்கு வந்த மணிகண்டன், நாகராஜ், சங்கிலிதுரைஆகியோா் அவருடன் அமா்ந்து மதுக் குடித்தனா். பிறகு, அவா்கள் மீண்டும் மதுப் புட்டிகளை வாங்கிக் கொண்டு வரட்டாற்று பாலம் அருகே அமா்ந்து மது குடித்தனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சோ்ந்து முருகனை கொலை செய்தது தெரியவந்தது என்றனா்.