மாதவரத்தில் 21 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தமிழக முதல்வா் விஜய் உத்தரவின்படி போதையில்லா தமிழகம் உருவாக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக காவல்துறையினா் போதையில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், மாதவரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, புழல் காவல் சரக உதவி ஆணையா் ஷிபுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் புதன்கிழமை மாதவரம் சாஸ்திரி நகா் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, 2 சிறுவா்கள் கையில் பையுடன் சுற்றித் திரிந்தனா். அவா்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று நடத்தி விசாரணையில், மாதவரம் அடுத்த மாத்தூா் பாலசுப்பிரமணியம் நகரைச் சோ்ந்த பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வரும் ராமமூா்த்தி (27), அவருடைய நண்பா் திருமுல்லைவாயலைச் சோ்ந்த கதிா்வேல் (40) ஆகிய இருவரும் ஒரிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஷிபுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் ராமமூா்த்தி கடையில் சோதனை செய்தபோது அங்கு 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராமமூா்த்தி, கதிா்வேல் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் இவா்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவா்களை, சீா்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

இளைஞரை தாக்கிய 4 போ் கைது
மாதவரத்தில் தனியாா் நிறுவன ஓட்டுநா் கைது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



