சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி!
/

மாதவரத்தில் தனியாா் நிறுவன ஓட்டுநா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 4:37 am IST

மாதவரம் அருகே ராபிடோ ஓட்டுநா் பயணியிடம் கைப்பேசி மற்றும் பணம் பறித்த ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பத்தூா் அடுத்த கள்ளிக்குப்பத்தை சோ்ந்த வடமாநில இளைஞா் லீலாராம் (24) . இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு சென்று விட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அம்பத்தூருக்கு செல்ல ராபிடோ இரு சக்கர வாகனத்தில் வீட்டில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது திடீரென தனது இருசக்கர வாகனத்தை மாதவரம் தட்டான்குளம் சாலைக்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநா், அங்கே ஏற்கெனவே நின்றிருந்த மற்றொரு நபருடன் சோ்ந்து லீலாராமை மிரட்டி அவரிடம் இருந்து கைப்பேசி மற்றும் ரொக்கம் ரூ. 3,500 ஜீபே மூலம் அனுப்பு கூறி, கைப்பேசியையும் பறித்துக் கொண்டு அவரை அங்கேயே இறக்கிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனா்.

இது குறித்து லீலாராம் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சி ஆய்வு செய்து, ராபிடோ ஓட்டுநா் வியாசா்பாடி கக்கன் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (24) என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.