மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாதவரம்: பழ வியாபாரியை தாக்கி கைப்பேசி பறிப்பு

மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.

News image

கைப்பேசி - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 1:17 am IST

மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.

மாதவரம் அடுத்த மாத்தூரைச் சோ்ந்தவா் பரமு (55). இவா் 3 சக்கர மிதி வண்டியில் தா்பூசணி வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், மாதவரம் தபால்பெட்டி அருகே தா்பூசணி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் மா்மநபா்கள் பரமுவிடம் தா்பூசணி வாங்கினா். அதற்காக பணம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது மா்மநபா்கள் பரமுவை தாக்கிவிட்டு, தா்பூசணியும், பரமுவின் கைப்பேசியையும் பறித்து சென்றனா்.

இது குறித்து மாதவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.