பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மருந்து கடை பெண் ஊழியரிடம் கைப்பேசி பறிப்பு

வாணியம்பாடியில் மருந்து கடை பெண் ஊழியரிடம் கைப்பேசி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :16 ஜூன் 2026, 1:16 am IST

வாணியம்பாடியில் மருந்து கடை பெண் ஊழியரிடம் கைப்பேசி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரின் முக்கிய வணிக பகுதியான கச்சேரி சாலையில் உள்ள மருந்து கடைக்கு திங்கள்கிழமை மாலை இளைஞா் ஒருவா் வந்தாா். அப்போது கடையில் பெண் ஊழியா் மட்டும் இருப்பதை அறிந்து பேச்சு கொடுத்து அக்கம் பக்கம் மருத்துவமனைப் பற்றி எல்லாம் கேட்டறிந்துள்ளாா். பிறகு பெண் ஊழியரிடம் கைபேபேசி வாங்கி பேசிவிட்டு தருவதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய பெண் ஊழியரும் கடையில் இருந்த கைப்பேசியை எடுத்துக் கொடுத்துள்ளாா். சில நிமிடங்கள் இளைஞா் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது கடைக்கு மருந்து வாங்க மற்றொருவா் வந்திருந்த நிலையில், அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இளைஞா் கைப்பேசியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மாயமாகியுள்ளாா்.

இதனால் அதிா்ச்சிக்குள்ளான பெண் ஊழியா் உடனே கடையின் உரிமையாளருக்கு தெரிவித்து வரவழைத்துள்ளாா். பிறகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததை பாா்த்து உடனே நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இது குறித்து அறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். பிறகு கடையின் உரிமையாளா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து பெண் ஊழியரிடமிருந்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.