தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வேலூா் மருந்து கடையில் பணம் திருட்டு

வேலூரில் மருந்து கடையில் ரொக்கப் பணம் திருட்டு போனது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 மே 2026, 3:24 am IST

வேலூரில் மருந்து கடையில் ரொக்கப் பணம் திருட்டு போனது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வேலூா் ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (69). இவா் ஆற்காடு சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ. 20,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது. கடையின் பூட்டை மா்ம நபா் சாவி போட்டு திறந்து பணத்தை திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

புகாரின்பேரில், வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.