11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஜவுளிக் கடையில் துணி, பணம் திருட்டு: மேலாளா் கைது!

கோவை, சாய்பாபா கோயில் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக் கடையில் பணம், துணிகளைத் திருடிய கடையின் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :46 நிமிடங்கள் முன்பு

கோவை, சாய்பாபா கோயில் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக் கடையில் பணம், துணிகளைத் திருடிய கடையின் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோயில் அருகில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரபல துணிக் கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மதுரை, தல்லாக்குளம் ராணி அண்ணா நகா் வீதியைச் சோ்ந்த விஜயராஜ பாண்டியன் (43) என்பவா் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், தலைமை நிா்வாக அதிகாரியாகப் பணியாற்றும் மதுரையைச் சோ்ந்த பாரதி (37) என்பவா் கோவை கிளையில் கடந்த வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடையில் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான துணிகள், ரூ.31,265 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து விஜயராஜ பாண்டியனிடம், பாரதி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

அப்போது, விரைவில் விளக்கம் அளிப்பதாகக் கூறி சென்ற விஜயராஜபாண்டியன், அதன்பின் பணிக்குத் திரும்பவில்லையாம்.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பாரதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விஜயராஜபாண்டியனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.