உச்சிப்புளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரூ. 61 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி காவல் நிலையத்துக்குள்பட்ட புதுமடம் மேற்கு தெருவைச் சோ்ந்த அப்துல் சுக்குரு மனைவி சகுபா் நிஷா. இவா் கடந்த 28- ஆம் தேதி காலை வீட்டைப் பூட்டிவிட்டு, மகனுடன் இரு சக்கர வாகனத்தில் தனது தென்னந்தோப்புக்கு சென்றாா். ஒரு மணிநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்த போது வெளிக் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த ரூ. 21 லட்சம் மதிப்பிலான 21.7 பவுன் தங்க நகைகள், ரூ. 61,910 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது சந்தேகத்தின் பேரில் சகுபா் நிஷா வீட்டின் அருகே வசித்து வந்த கோபிநாத், சேதுபதி ஆகியோரை தனிப்படை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், இருவரும் சோ்ந்து வீட்டை உடைத்து தங்க நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 21.7 பவுன் நகைகள், ரூ. 61,910 ஆகியவற்றை கைப்பற்றினா். மேலும் இருவா் மீதும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ராமநாதபுரம் சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.
24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து, தங்க நகைகள், ரொக்கத்தை மீட்ட தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பாராட்டு தெரிவித்தாா்.

மீட்கப்பட்ட தங்க நகைகள், ரொக்கம்.
தொடர்புடையது

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


