கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வசிப்பவா் சிவக்குமாா்(46), விவசாய தொழிலாளி.
அந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சிவக்குமாா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றாா். பின்னா் அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா் வீட்டின் முன்பக்கக் கதவு உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து கடலூா், கீழ்ப்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகரைச் சோ்ந்த அப்பாஸை (48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ரயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் சகோதரா்கள் இருவா் கைது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

